Wednesday, August 30, 2023

தமிழக தலைவர்கள் : அறிஞர் அண்ணா

சி.என். அண்ணாதுரை (Conjeevaram Natarajan Annadurai) அவர்கள் செப்டம்பர் 15,1909 - இல் காஞ்சிபுரத்தில் ஒரு ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை  நடராஜனார், தாய் பங்காரு அம்மாள்.

  • இவர் தனது சிற்றன்னையான இராசாமணி அம்மையாரிடம் வளர்ந்தார்.
  • இவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பயின்றார்.
  • இவர் 1927 இல் காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராகப் பணியாற்றினார்.
  • இவர் 1930 இல் இராணி அம்மையாரை மணந்தார்.
  • இவர் முதன்முதலாக எழுதிய 'பெண்கள் சமத்துவம்' என்னும்கட்டுரையானது மாசிலாமணி முதலியார் வெளியிட்டு வந்த 'தமிழரசு' என்னும் இதழில் 1931-ஆம் ஆண்டு வெளிவந்தது.
  • இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி. (ஹானர்ஸ்) பட்டமும், பிறகு எம். (பொருளாதாரம் மற்றும் அரசியல்) பட்டமும் பெற்றார்.
  • சென்னையில் உள்ள கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் ஆசிரியராக இவர் பணியாற்றினார்.

பொது வாழ்க்கை:

பேராசிரியர் 'வரதராஜனும்', நீதிக்கட்சியின் 'வெங்கடசாமியும்' முக்கியமான மூன்று கருத்துகளை அண்ணாவுக்கு அறிமுகப்படுத்தி அவர் பொதுவாழ்வில் ஈடுபட காரணமாக இருந்தனர்

அந்தக் கருத்துகள்:

  • சமூக நீதி
  • பிராமணரல்லாதார் முன்னேற்றம்
  • அரசியல் கட்சி மூலம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துவது

இவர் சாதி ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் நீதிக்கட்சியில் 1934 - இல் முறைப்படி சேர்ந்தார். இதற்கு அரசியல் இரட்டையர்களான'சண்டே அப்சர்வர்' இதழ் ஆசிரியர் பி. பாலசுப்பிரமணியனும், நீதிக்கட்சியின் 'ஜஸ்டிஸ்' இதழ் ஆசிரியர் டி.வி. நாதனும் உடனடிக் காரணமாக இருந்தனர்.