காமராசர் குமாரசாமி மற்றும சிவகாமி அம்மையார்க்கு மகனாக 1905-ம் ஆண்டு சூலை மாதம் 15-ம் நாள் விருதுநகரில் பிறந்தார்.
இவரது இயற்பெயர் காமாட்சி. பெற்றோர்கள் இவரை ராஜா என்று அழைத்தனர். பின்னர் காமாட்சி ராஜா என்று அழைக்கப்பட்ட இவர் காமராசர் என்று மரியாதையோடு அழைக்கப்பட்டார்
குடும்ப பொருளாதார சுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை 6-ம் வகுப்போடு நிறுத்திக்கொண்டார்.
இவர் பயின்ற பள்ளிகள் ;
- 1. ஏனாதி வித்யாசாலா
- 2.சத்திரிய வித்யாசாலா
விடுதலைப்போராட்டம் :
1919 - ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
1920 - ம் ஆண்டு ஒத்துழையாமை போராட்டத்தில் கலந்து கொண்டார்
1922 - ம் ஆண்டு விருதுநகர் நகராட்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியை தன் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார்.
1924 - ம் ஆண்டு வைக்கம் போராட்டம் மற்றும் சுசீந்திரம் ஆலய நூழைவு போராட்டத்தில் கலந்து கொண்டார்.
1925 - ம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
1927 - ம் ஆண்டு வாள் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார்.
1927 - ம் ஆண்டு நேருவின் தலைமையில் இந்திய குடியரசுக் காங்கிரஸ் என்னும் மாநாடு விருதுநகரில் நடைப்பெற்றது. இதற்க்கு காமராசரின் முயற்ச்சியே முக்கிய காரணம்.
காங்கிரஸ் இயக்கத்தை எளிய மக்களிடம் கொண்டு செல்ல கிராமங்களில் பரப்புரை மேற்க்கொண்டார். இதற்க்கு காமராசர்க்கு பக்க பலமாக விளங்கியவர்கள்.
- அண்ணாமலைப் பிள்ளை
- பி.எஸ்.குமாரசாமி ராஜா
1928 - ம் ஆண்ட சைமன் கமிஷன் மதுரை வந்த பொழுது அதை கடுமையா எதிரத்தார். ஜார்ஜ் ஜோசப்புடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.