Monday, September 25, 2017

Vellore Mutiny - வேலூர் சிப்பாய் கலகம்

வேலூர் சிப்பாய் கலகம்
கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்ட சமயத்தில் அவர்கள் பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்நது. 18-ம் நூற்றாண்டு வரை சிறு மன்னர்கள் மற்றும் குறு ஆட்சியார்கள் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது உதாரணத்திற்க்கு தமிழகத்தில் பாளையக்கார்ர்கள் மற்றும் மருது சகோதர்கள் நடத்திய போர்கள். திப்பு சுல்தானின் பிரிட்டீஷ் எதிரப்பு போராட்டம் போன்ற பல உதாரணங்கள் இருக்கின்றன.

18 நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் முதல் அறுபது ஆண்டுள் வரை பிரிட்டீஷ் ஆட்சிக்கு மிகப்பெரிய பிரட்சனையாக அமைந்த்து சிப்பாய்களின் புரட்சி. கடைசியாக 1857 –ல் நடந்த மிகப்பெரிய சிப்பாய் புரட்சி அல்லது முதல் இந்திய சுதந்திர போர் என்று அழைக்கப்படும் சிப்பாய்களின் கலத்திற்க்கு பிறகு இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

Sunday, September 24, 2017

Tamil Nadu Goverment Symbols

தமிழ்நாட்டின் அடையாளங்கள்

தமிழ்நாட்டின் மாநிலச்சின்னம்

திருவல்லிப்புத்தூர் கோவில் கோபுரம்

இக்கோபுரம் 11 நிலைகளை கொண்ட 192 அடி உயரம் கொண்டது. இது பெரியாழ்வார் தன் மகள் ஆண்டாளின் கணவர் திருமாலுக்காக கட்டப்பட்டதாக நம்ப்ப்படுகிறது.


இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன. அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த காமராசர் தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அதனை வடிவமைத்த ஓவியர் கிருஷ்ணா ராவ், மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் மேற்கு கோபுரத்தை மையமாக வைத்து கோபுரத்திலுள்ள காளை வாகனத்தின் மீது அமர்ந்திருக்கும் சிவ பார்வதி சிலைகள் உட்பட சேர்த்து வடிவமைத்தார்.



மதச்சார்பற்ற நாட்டில் மதரீதியான இடங்களை, முத்திரையில் வைக்கக் கூடாது என்று கோரி 2013 இல் தொடுத்த பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து கோவில் கோபுரம் என்பது எந்தவொரு மதத்திற்க்கும் சொந்தமானது அல்ல அது தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த்து என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
குறிப்பு:

தமிழ்நாட்டின் முதலமைச்சராக குமாரசாமி ராஜா (1949-1952) இருந்த போது தன் ஊரில் உள்ள கோவில் கோபுரத்தை தமிழநாடு அரசின் சின்னமாக அறிவத்தார்

குமாரசாமி ராஜா சொந்தமான ராம்கோ சிமெண்டஸ் நிறுவனத்தின் சின்னமும் திருவல்லிபுத்தூர் கோவில் கோபுரமே


தமிழக அரசின் வாசகம்

வாய்மையே வெல்லும்

இந்தியாவின் தேசிய சின்னத்தில இடம் பெற்றுள்ள “சத்யமேவ ஜெயதே” என்ற சமஸ்கிருத வாக்கியம தேவநாகரி எழுத்தில் இருந்து வந்தது. இது முண்டக உபநிடத்தின் புகழ்பெற்ற வாக்கியங்களில ஒன்று.

மாநிலப்பறவை:

மரகதப்புறா

இதன் அறிவியல் பெயர் : chalchophaps Indica


மரகத்புறா பச்சைநிறமுடைய இறக்கையுடன் காணப்படுவதால் இது பச்சை நிறப்புறா எனவும் அழைக்கப்படுகிறது. இது இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா வரை பரவியுள்ளது.

பறக்கும் திறனுடையது என்றாலும் பெரும்பாலும் நிலத்தில் நடந்தே இரை தேடுகின்றன மழைக்காடுகள் சதுப்புநலக்காடுகள் மற்றும் அதையொத்த புதர் காடுகளில் வாழ்கின்றன.

மாநில விலங்கு:

நீலகிரி வரையாடு

அறிவியல் பெயர்: Nilgiritragus hylocrius

வரை என்றால் மலையுச்சி என்று பொருள் மலையுச்சியில் வாழும் ஆடுகள் என்பதால் வரையாடுகள் எனப் பெயர்பெற்றது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் சிறப்புமிக்க உயிரினங்களுள் வரையாடு ஒன்று.


கடல்மட்டத்தில் இருந்து 3500 அடி உயரத்தில் மட்டுமே இந்த வகை ஆடுகள் வாழ்கின்றன. சங்க இலக்கியங்கள் பலவற்றில் வரையாடுகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

மாநில மலர் :

செங்காந்தள் மலர்

இதன் அறிவியல் பெயர் :Gloriosa Superba


இதன் மற்றொரு பெயர் கார்த்திகை மலர். கார்த்திகை மாத்த்தில் மட்டுமே பூப்பதால் கார்த்திகை மலர் என்று பெயர் பெற்றது. கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டில் முதலாவதாக பாடப்பட்ட மலர்

புவியிர்ப்பு விசைக்கு எதிராக மேல் நோக்கி தீச்சுடர் போன்று ஒளிரும் தன்மையுடையது


மாநில மரம்

பனை

அறிவியல் பெயர் : Barassus flabellifier

பனை என்பது புல்லினத்தை சார்ந்த தாவரவகை. மரம் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் இது மரம் வகையை சார்ந்நது அல்ல. இதை தற்க்கால அறிவியல் மட்டுமன்ற சங்க இலக்கியங்களம் தெளிவுபடுத்துகின்றன.


இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகாமான் பனை மரங்கள் உள்ளன அவற்றில் பாதிக்கும் அதிகமாக சுமார் 5 கோடிக்கும் அதிகமான மரங்கள் தமிழகத்தில் உள்ளன.

பனை மரத்தினால் எண்ணற்ற பயன்கள் கிடைக்கின்றன இதனால் இதை கேட்டத்தை கொடுக்கும் தேவலோக்த்து மரம் எனக்கூறுவர்

மாநிலப்பாடல்:

தமிழ்த்தாய் வாழ்த்து

பாடல் ஆசிரயர் : மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை

பாடல் இடம் நூல் : மனோன்மணீயம்

மனோண்மனீயம் என்னும் இந்நூல் லார்டு லிட்டன் பிரபு எழுதிய ரகசிய வழி என்னும் நூலின் மொழிப்பெயர்ப்பு “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்” – எனத்துவங்கும் இந்தப்பாடல் தமிழக அரசு விழாக்க்கள் பள்ளிகள் கல்லூரிகள் ஆகியவற்றில் பாடப்படும் பாடல்.

1970 – ம் ஆண்டு முதலமைச்சர் மு.கருணாநிதி தலைமையிலான அரசு இப்பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவத்தது. ஆரியம் போல் தமிழ் வழக்கழிந்து போகவில்லை என்ற வரிகள் நீக்கப்பட்டு தமிழ்த்தாயை மட்டும் வாழ்த்திப்பாடும் வரிகள் மட்டும் தமிழ்தாய வாழ்தாக ஏற்றக்கொள்ளப்பட்டது.

மாநில நடனம்:

பரதநாட்டியம்

பரதநாட்டியம் பல பெயர்காரணங்கள் உள்ளன.

இது நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரதமுனிவரின் பெயரால் பரதநாட்டியம் என் பெயர்பெற்றது எனக்கூறுவோர் உளர் ப பாவம் (வெளிப்படுத்தும் தன்மை) ர ராகம் த தாளம் – என்பவற்றை குறிப்பதாலையே பரதம் என பெயர் பெற்றது.


இடைக்காலத்தில் இந்நடனம் சமூக மதிப்பை இழந்நது. மீண்டும் அதை மீட்டெடுத்தப்பெருமை பன்னாட்டு நிறுவனமான கலாஷேத்ராவை சாரும்

தற்போது ஆடப்படும் நடனம் பழங்காலங்களில் கோவில்களில் நடனமங்கையர் ஆடிய சதிராட்டத்தின் முறைப்படுத்தப்பட்ட நடனம். இதை முறைப்படுத்தியவர்கள் தஞ்சை பொன்னையா பிள்ளை சகோதர்கள்

மாநில விளையாட்டு:

கபடி – சடு குடு

தமிழ் மக்களின் பாரம்பரிய விளையாட்டாகும். ஜல்லிக்கட்டுக்கு தயாரவதற்க்கு முன்பு பயிற்ச்சி விளையாட்டாக கபடி விளையாடப்பட்டது தெற்க்கு ஆசிய நாடுகளில் பரவலாக இந்த விளையாட்டு விளையாடப்படுகதிறது.

Friday, September 22, 2017

இந்தியாவிற்க்கு ஐரோப்பியர்கள் வருகை - போர்த்துக்கீசியர்கள்

இந்தியா பண்டைய காலம் தொட்டே மேற்க்த்திய நாடுகளுடம் வாணிபதொடர்பு கொண்டிருந்தது. இந்தியாவிற்க்குள் நுழைய இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன வடமேற்க்கு எல்லையில் உள்ள தரை வழி மற்றொன்று கடல்வழி.

முதன்முதலாக ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்க்கு கடல்வழி கண்டுபிடித்த பெருமை போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமாவை சாரும். இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது.1497-ம் ஆண்டு ஜுலை 8 நாள் போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் துறைமுகத்தல் இருந்து புறப்பட்ட வாஸ்கோடகாமா 1498-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி கேராளாவில் உள்ள கள்ளிக்கோட்டை துறைமுகத்தை அடைந்தார்.

கோழிக்கோடு பகுதியை ஆண்ட சாமரின் மன்னரால் வரவேற்க்கப்பட்ட வாஸ்கோடகாமா அவரின் துணைக்கொண்டு பல பண்டக சாலைகளை அமைத்துவிட்டு நாடு திரும்பினார்.

Thursday, September 14, 2017

இந்திய தேசிய அடையாளங்கள் – விலங்குகள் மற்றும் பறவை

இந்திய தேசிய விலங்குகள் மற்றும் பறவை:

தேசிய விலங்கு: National Animal




இந்தியாவின் தேசிய விலங்கு “பெங்கால் புலி” இதை ராயல் பெங்கால் புலி என்றும் அழைக்கின்றனர்

இதனுடைய அறிவியல் பெயர் Panthera Tigris

1972 – ம் ஆண்டு புலி இந்தியாவின் தேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்க்கு முன்பு வரை சிங்கமே இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது

இந்திய தேசிய அடையாளங்கள் – தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல்


தேசிய கீதம் (நாட்டுப்பண்) : National Anthem


நமது நாட்டின் தேசிய கீதம் “ ஜண கண மண” வங்காள கவிஞர் ரபீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்டது.

ரபீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் ஏழுதிய கீதாஞ்சலி என்ற கவிதை தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது. 

5 பத்திகள் கொண்ட இப்பாடலின் முதல் பத்தி தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1911 ஆண்டு நடைப்பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இரண்டாம் நாள் இப்பாடல் முதன் முறையாக பாடப்பட்டது (1911 டிசமபர் 27)

இந்திய தேசிய அடையாளங்கள் - தேசியச் சின்னம்


சாரநாத்தில் உள்ள அசோகச ஸ்தூபியில் இருந்து எடுக்கப்பட்ட அசோகசக்கரமே இந்தியாவின் தேசியச்சின்னம் ஆகும் .

அசோக ஸ்தூபி:

அசோக ஸ்தூபி கி.மு.250 ஆம் ஆண்டுகளில் சாரநாத்தில் உருவாக்கப்பட்டது.புத்தர் தமது முதல் போதனையை துவங்கிய இடம் சாரநாத். எனவே அவ்விடத்தில் அசோகர் ஒரு உயரமான கல்தூணை நிறுவினார்.
கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை மலர்,அதன்மேல் நான்கு சக்கரங்களை பக்கவாட்டில்கொண்ட முரசு போன்ற அமைப்பு கொண்டது. சிங்கங்கள் நான்கும் ஒன்றை ஒன்று பின்புறம் ஒட்டியபடி நிற்கின்றன. இதில் உள்ள சக்கரங்களை தர்ம சக்கரங்கள் எனப்படுகின்றன . தர்ம சக்கரத்தில் 24 ஆரங்கள் உள்ளன .சக்கரங்களுக்கு அருகில் நான்கு பக்கமும் சிங்கம்,குதிரை,எருது,யானை ஆகியவற்றின் உருவங்கள் உள்ளன
இந்த தூணில் நான்கு  சிங்கங்கள் அடுத்தடுத்து நிற்கின்றன.இவை அதிகாரம்,வீரம்,பெருமை,நம்பிக்கை ஆகிய நான்கு பண்புகளைக் குறிக்கின்றன.இவை வட்ட வடிவ பீடத்தில் நிறுவப்படுள்ளன.இந்த பீடத்தின் கிழக்கில் யானை,மேற்கில் குதிரை,தெற்கே எருது,வடக்கில் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளன.இந்த பீடம் ஒரு மலர்ந்த தாமரை வடிவத்தில் அமைந்துள்ளது.

Wednesday, September 13, 2017

இந்திய தேசிய அடையாளங்கள் - தேசியக்கொடி


ஒரு நாட்டின் அடையாளம் அதன் தேசியக்கொடியாகும்.நமது நாட்டின் தேசியக்கொடி மூவர்ணக்கொடி. சுதந்திரம் பெறுவதற்க்கு முன்பே நமது தேசியக்கொடி உருவாக்கப்பட்டுவிட்டது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நம் நாட்டின் தேசியக் கொடியை தீர்மானிப்பதற்காக ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது . அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் தலைவரும் இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவருமான பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் உருவாக்கப்பட்ட அக்கமிட்டியில்